Wednesday 1st of May 2024 11:16:22 AM GMT

LANGUAGE - TAMIL
.
தீவிரமடையும் கொரானா: யாழில் இருந்து பயணிப்போருக்கு வவுனியாவில் பி.சி.ஆர். பரிசோதனை!

தீவிரமடையும் கொரானா: யாழில் இருந்து பயணிப்போருக்கு வவுனியாவில் பி.சி.ஆர். பரிசோதனை!


யாழ். குடாநாட்டில் அண்மைய நர்களில் கொரோனாத் தொற்று பரம்பல் தீவிரமடைந்துள்ள நிலையில் யாழில் இருந்து பயணிப்போருக்கு வவுனியாவில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வவுனியா விதை உற்பத்திகள் பண்ணைக்கு முன்பாக பொலிஸார் மற்றும சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து குறித்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பேருந்துகளை வழி மறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசொதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளுடாக வவுனியாவிற்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE